வசந்தவிடமிருந்து மக்களுக்கு ஒரு கடிதம் !
அன்புள்ள தாய்,தந்தயரே சகோதர சகோதரிகளே !
2022 முடிந்து ஒரு புதிய ஆண்டு உதயமாகியுள்ளது . உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக இருக்கும்போது, பொருளாதாரக் குற்றங்களைச் செய்து, மக்களைக் கொன்று, கொலைக் கலாச்சாரத்தைப் பேணிய உண்மையான பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழித்ததற்காக நான் 140 நாட்களாக சிறையிலடைக்க பட்டுள்ளேன் . நான் மட்டுமல்ல, வளமான சமுதாயத்திற்காகப் போராடியவர்களும், பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பில் மாற்றத்தைக் கோரி போராடியவர்களும் சிறையில் இருக்கிறார்கள். இன்னும் பலர் சிறையில் அடைக்கப்படாவிட்டாலும், அரசாங்கத்தின் அடக்குமுறையினால் அவர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சாதாரணமாகச் செய்வதற்கு சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது என்பதை நான் அறிவேன்.
சுவரில் இருந்து கலெண்டரை அகற்றுவது போல் 2022 ஆம் ஆண்டை வரலாற்றில் இருந்து அகற்ற முடியாது. ஏனென்றால் நாங்கள் கற்றுக்கொண்ட வருடம...